

கறுப்பு யூலை இனக்கலவர தாக்குதலில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு சொத்துக்கள் சேதமாக்கப்பட்ட 37ம் ஆண்டு நினைவு நாள் நினைவேந்தல் இன்று (2) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
பல்கலை வளாகத்தில் மாணவர்களின் ஒருங்கிணைப்பில் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மலர் தூவி, மெழுகுவர்த்தி கொளுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
