
தொலைபேசி கட்டணம், தொலைக்காட்சி சேவைகளுக்கான கட்டணங்கள் மற்றும் இணைய சேவைகளுக்கான கட்டணங்களை அதிகரிப்பதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த கட்டணத்திருத்தம் செப்டெம்பர் 5 ஆம் திகதி முதல் அமுலுக்குவரும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி நிலையான தொலைபேசிகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இணைய சேவைகளுக்கான கட்டணங்கள் 20 சதவீதத்தினால் அதிகரிக்கப்படும்.
செய்திமதி தொழில்நுட்ப தொலைகாட்சி சேவைகள் மற்றும் கேபிள் தொலைகாட்சி சேவைகளுக்கான கட்டணங்கள் 25 சதவீதத்தினால் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.