மொங்கோலியாவில் கொவிட் தொற்றிலிருந்து மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

மொங்கோலியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொங்கோலியாவில் மூன்று இலட்சத்து 74பேர் குணமடைந்துள்ளனர்.

உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 77ஆவது நாடாக விளங்கும் மொங்கோலியாவில் மூன்று இலட்சத்து 26ஆயிரத்து 738பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 450பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 348பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 14பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 25ஆயிரத்து 214பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 192பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com