
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடித்தழிக்கப்பட்ட போர்க் கால, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அமைதித் தூபி என்ற பெயரில் மீண்டும் கட்டியெழுப்ப பல்கலைக்கழகப் பேரவை அனுமதி வழங்கியிருக்கிறது.
மாதத்தின் இறுதி சனிக்கிழமை நடைபெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவைக் கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது.
