வெள்ளவத்தையில் கத்திக்குத்து :காயமடைந்த நபர் உயிரிழப்பு

கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கொலை சம்பவம் குறித்த விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இரு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சந்தேக நபர் மற்றைய நபரை கத்தியால் குத்தியுள்ளார்.

இதன் பின்னர் காயமடைந்த குறித்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் வெள்ளவத்தை ஸ்வர்ணா வீதியில் வசிக்கும் 34 வயதுடைய நபர் ஆவார்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைதுசெய்துள்ள பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com