
இலங்கைக்குள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் 4 பேர் குணமாகி இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றால் 6வது பொதுமகன் மரணமான நிலையில் இன்று காலையில் மேலும் இரண்டு கொரோனா வைரஸ் தொற்றாளிகள் இனங்காணப்பட்டனர்.
80 வயதான தொற்றாளியே அங்கொட தொற்று நோய் தடுப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணமானார். அதேநேரம் கொரோனா வைரஸ் தொற்றாளிகளின் எண்ணிக்கை 180ஆக உயர்ந்துள்ளது.