28 நாட்களில் 29694 பேர் கைது!

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 29694 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மார்ச் மாதம் 20ம் திகதி முதல் இன்று (17) வரையான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் 7646 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை இவர்களில் பலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com