
வவுனியா, ஆசிகுளம் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். இன்று (15.04.2020) மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, ஆசிகுளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மயிலங்குளம் குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தவறுதலாக நீரில் வீழ்ந்து மூழ்கி மரணமடைந்துள்ளார்.