
யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பொருட்களை எடுத்து வருபவர்களுக்கும் வெளி மாவட்டங்களில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு பொருட்களை எடுத்து வருபவர்களுக்கும் ஊரடங்கு பாஸ் அனுமதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் யாழ் வர்த்தக சங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது.
“இவ்வாறு பாஸ் அனுமதியைப் பெற்றுக் கொள்ளும் வர்த்தகர்கள் அதில் மாற்றங்கள் செய்யவோ அல்லது அந்த அனுமதியை தவறாகப் பயன்படுத்தவோ கூடாது. நடைமுறையை மீறிச் செயற்பட்டால் அனுமதி இரத்துச் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.”
இவ்வாறு யாழ்ப்பாணம் – மானிப்பாய் வீதியிலுள்ள யாழ் வணிகர் கழக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (07) நடாத்திய ஊடக சந்திப்பின் போது வர்த்தக சங்கத்தின் உப தலைவர் ஆர்.ஜெயசேகரன் தெரிவித்துள்ளார்.
மேலும்,
பாஸ் அனுமதியை பெற்றுக் கொள் சில நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ‘அதாவது கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு செல்வதானால் உரியவர் தமது பிரதேச செயலரிடம் அனுமதி பெற வேண்டும். பின்னர் பிரதேச செயலர் பிரிவிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் விபரங்களைப் பதிவு செய்து பரிசோதனை மேற்கொண்டு, அந்த அறிக்கையை மாவட்டச் செயலகத்தில் பதிவு செய்தாக வேண்டும். தொடர்ந்து அதனை பொலிஸ் நிலையம் கொண்டு சென்று அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்’. – என்றார்.
I have been looking for articles on these topics for a long time. casinosite I don’t know how grateful you are for posting on this topic. Thank you for the numerous articles on this site, I will subscribe to those links in my bookmarks and visit them often. Have a nice day