இலங்கையில் கொரோனாவில் இருந்து மீண்ட 4 மாத குழந்தை!!

இலங்கையில் பதிவாகிய மிக குறைந்த வயதுடைய கொரோனா நோயாளியான நான்கு மாத குழந்தை குணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நாத்தண்டிய பிரதேசத்தை சேர்ந்த குழந்தை குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த குழந்தைக்கு கடந்த 30ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றியதாக உறுதி செய்யப்பட்டது.

இந்த குழந்தை சிலாபம் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தது. அதற்கமைய இந்த குழந்தையை கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்ப வைத்தியர் கபில மல்லவஆராச்சி நடவடிக்கை மேற்கொண்டார்.

இந்த குழந்தைக்கு கொரோனா தொற்றிய போதிலும் குழந்தையின் பெற்றோருக்கு கொரோனா தொற்றாமையானது குறிப்பிடத்தக்க முக்கிய விடயமாக காணப்பட்டது.

அதற்கமைய இந்த குழந்தைக்கு தாத்தாவிடம் இருந்து கொரோனா தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

குழந்தையின் தாத்தா கொரோனா தொற்றுக்குள்ளாகி கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இறுதியில் இந்த குடும்பத்தில் 4 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் மூவர் குணமடைந்துள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com