மதுபானம் தயாரிப்பது குறித்து சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்தால் கடூழியச் சிறை!!

மதுபானம் தயாரிப்பது தொடர்பாக சமூக ஊடகங்களில் பிரசாரங்களை செய்யும் நபர்களுக்கு எதிராக இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனையை வழங்க முடியும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் சந்தர்ப்பத்தில் சமூக ஊடகங்களில் மதுபானம் தயாரிப்பது சம்பந்தமான காணொளிகள் மற்றும் பிரசாரங்கள் வழமையை விட அதிகரித்துள்ளதாகவும் அவை மேற்கொள்ளப்படும் விதம் குறித்து பொலிஸார் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மதுபானம் தயாரிப்பது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பிரசாரங்களை செய்வது இலங்கையின் சட்டத்திற்கு அமைய குற்றம் எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com