
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்ட விசேட ரோந்து நடவடிக்கையில் இரு வேறு பகுதிகளில் போதை மாத்திரைகளுடன் மூவர் நேற்று செவ்வாய்க்கிழமை (நவ 22) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 19 மற்றும் 22 வயதுடைய இளைஞர்கள் முறையே 8 மற்றும் 10 போதை மாத்திரைகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது பெற்ற தகவலின்படி மல்லாகம் புகையிரத நிலைய வீதியில் வைத்து 36 வயது பெண்ணொருவர் 40 போதை மாத்திரைகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.