இரு பயணிகள் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து : 10 பேர் காயம் – ஹட்டனில் சம்பவம்

அதிவேகமாகச் சென்ற இரண்டு தனியார் பஸ்கள் மோதிக் கொண்டதில்  இரு பஸ்களிலும் பயணித்த 10 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.  

இந்த விபத்து இன்று (02) காலை 7.30 மணியளவில் ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் நாவலப்பிட்டி மிப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும்  மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com