
யாழ்.சிறுப்பிட்டியைச் சேர்ந்தவரும் பிரான்ஸ்ல் வசித்துவந்தவருமான சசிதேவி சதீஸ்குமார் (வயது 46) அவர்கள் கொரோனா தொற்றிற்கு இலக்காகி 11.04.2020 சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
கடந்த 10 நாட்களாக கொரோனா தொற்றிற்கு இலக்காகி தனிமையில் இருந்துள்ளார். பின்னர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமானார்.
மூன்று பிள்ளைகளின் தாயாரான இவரின் இரு பிள்ளைகள் கொரோனா தொற்றிற்கு உள்ளாகிக் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.