
பாடசாலைகளுக்கான 2020 ஆம் ஆண்டுக்கான 2 ஆம் தவணை எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகுமென ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஏப்ரல் 20 ஆம் திகதி பாடசாலைகளுக்கான 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக ஏற்கனவே திட்டமிட்டதைப் போன்று ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு ஆரம்பிக்க முடியாதென்ற காரணத்தால் மே மாதம் 11 ஆம் திகதி பாடசாலைகளுக்கான 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.