இன்று எழுவருக்கு கொரோனா உறுதியானது!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று மேலும் 7 பேருக்கு இருப்பது இன்று (11) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனிமை உத்தரவுகளை மீறிய நிலையில் ஒலுவில் தனிமை மையத்துக்கு அனுப்பப்பட்ட 28 பேரில் ஐா-எல பகுதியை சேர்ந்த ஆறு பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

அத்துடன் தெஹிவளையில் ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதன்படி இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 197 ஆகும்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com