
வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டோர் முகக்கவசம் அணிவது இன்று (11) முதல் கட்டாயமானது என்றும், முகக்கவசம் அணியாது வீதியில் பயணிப்போரை திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்குமாறும், பிரதிப் பொலிஸ்மா அதிபர், சகல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு, அனுமதி பத்திரம் வைத்துக் கொண்டு வீதிகளில் பயணித்தாலும், முகக்கவசம் அணியாவிட்டால் எதனையும் பொருட்படுத்தாது குறித்த சட்டத்தை செயற்படுத்துமாறு, அவர் உத்தரவிட்டுள்ளார்.