
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மீண்டும் திறப்பது தொடர்பில் தீர்மானம் ஒன்றை எட்டமுடியாத நிலைமை காணப்படுவதாக கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் இன்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.