
நாட்டின் சில பகுதிகளில் இன்று (09 ) வெப்பநிலை அதிகரிப்பு நிலவக்கூடும் என காலநிலை அவதான நிலையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் அநுராதபுரம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு , மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிப்பு நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.