
கொழும்பின் சில பகுதிகளில் இன்று (09) பிற்பகல் 1 மணிமுதல் 7 மணிவரையில் 18 மணிநேர நீர்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு 9 , 14 ,ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமல்படுத்தப்பட உள்ளதுடன் கொழும்பு 13 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.