இலங்கை மக்களின் கடனட்டைகளிலிருந்து பணம் மேசடி!

இலங்கை மக்களின் கடனட்டைகளில் இருந்து தரவுகளை திருடியமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.

இணையத்தளத்தினூடாக வீடுகளுக்கு பொருட்களை விநியோகிப்பதாக தெரிவித்து இந்த மோசடிகள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான மோசடிகளில் ஈடுபடும் போலி இணையத்தளங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவின் தகவல் தொடர்பாடல் பிரிவு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.

அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத அவ்வாறான இணையத்தளங்களில் இருந்து பொருட்கள் கொள்வனவில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அவர் பொதுமக்களை எச்சரித்துள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com