
சாவகச்சேரி நகரமத்தியில் அமைந்துள்ள டிறிபேக் கல்லூரியிலும் இன்று அதிகாலை 1.00 மணியளவில் இரண்டு பேரூந்துகளில் அழைத்து வரப்பட்ட சுமார் 45 வரையான இராணுவத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினரை தனிமைப்படுத்த பாடசாலைகளை பயன்படுத்த போவதில்லை என இராணுவத் தளபதியால் நேற்று கூறப்பட்டது.
தென்மராட்சியிலேயே மக்கள் அதிகமாக கூடுகின்ற இடமாக சாவகச்சேரி நகரம் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
”தனிமைப்படுத்தல் நிலையங்களாக பாடசாலைகள் மாற்றப்படாது” எனக் கல்வியமைச்சு அறிவித்துள்ள நிலையில் இதன் உண்மைத்தன்மைகளை கல்வியமைச்சு முறையான அறிக்கையூடாக வெளிப்படுத்தவேண்டும்.