உந்துருளி மோதியதில் இரண்டு வயது குழந்தை பலி!

மெதிரிகிரிய-மெதகம்புர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தையின் பெற்றோர் குழந்தையையும் அழைத்து கொண்டு நீராட சென்ற வேளையில் வீதி வழியே வந்த உந்துருளி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டுள்ளது.

இறந்த குழந்தை இரண்டு வயதுடைய குழந்தை என குறிப்பிடப்பட்டுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com