முக்கிய செய்திகள்

உடுத்துறை துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள்!
உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் இன்றைய தினம் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இச்சிரமதானத்தில் பொதுமக்களுடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.
மேலும்....
தமிழ்ச்செல்வன் அவர்களின் 15வது நினைவேந்தல்!
தமிழ்ச்செல்வன் அவர்களின் 15வது நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகதத்தில் நடைபெற்றது. இந்நினைவேந்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்…
மேலும்....
யாழ் கோப்பாய் நினைவேந்தல் நாள் சிரமதான பணிகளுக்கு இடையூறு விளைவித்த இராணுவம்.
கார்த்திகை மாத தொடக்க நாளில் இன்று யாழ் கோப்பாய் துயிலுமில்லம் அருகில் சிரமதான பணிகளை மேற்கொள்ள சென்றிருந்த ஏற்பாட்டு குழுவுக்கு இராணுவத்தினர் இடையூறு விளைவித்து எமது புனிதமான…
மேலும்....
குறித்த சாதியினர் மட்டுமே திலீபனை நினைவுகூரலாம் – மணிவண்ணன் ஆதரவாளர்கள் கிழப்பும் புதுப்பிரச்சனை!
தியாகதீபத்தின் 35வது வருட நினைவேந்தல்கள் நல்லூரில் உள்ள தியாகதீபத்தின் நினைவுத்தூபியில் நடைபெற்று வருகின்றது. 11வது நாளான இன்று திடிரென பொதுக்கட்டமைப்பு என்ற பெயரில் அவ்விடத்திற்கு வந்த சிலர்…
மேலும்....
தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில் மதுபோதையில் வந்த மணிவண்ணனின் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி!
சற்றுமுன்னர் நல்லூரில் உள்ள தியாகதீபத்தின் நினைவிடத்தில் நின்றவர்கள் மீது மணிவண்ணனால் அழைத்துவரப்பட்ட மதுபோதையில் வந்த நபர்களால் தாக்குதல் முயற்சியொன்று நடைபெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள்களில் மதுபோதையில் வந்த சிலர்…
மேலும்....
தியாகதீபம் திலீபன் 08ம் நாள் நினைவேந்தல்!
தியாகதீபம் திலீபன் அவர்களின் 35வது வருட நினைவேந்தலின் 08ம் நாள் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் நடைபெற்றது.
மேலும்....
தியாகதீபம் திலீபன் அவர்களின் 06ம் நாள் நினைவேந்தல்!
தியாகதீபம் திலீபன் அவர்களின் 35வது வருட நினைவேந்தலின் 06ம் நாள் நிகழ்வுகள் இன்று காலை யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் நடைபெற்றது.
மேலும்....
மகசின் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் 13 அரசியல் கைதிகள் குறித்து சட்டமா அதிபருடன் பேச்சு
மகசின் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக தமது விடுதலையை முன்வைத்து உண்ணாவிரதமிருந்துவரும் 13 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சட்டமா அதிபருடன் சந்திப்பொன்றை…
மேலும்....
இலங்கையில் மனிதஉரிமை மீறல்கள் இடம்பெற்ற இடங்கள் – வரைபடத்தை வெளியிட்டது சர்வதேச அமைப்பு
உள்நாட்டு மோதலின் போது ( 1983- 2009) இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற பகுதிகளை சுட்டிக்காட்டும் வரைபடமொன்றை கனடாவை சேர்ந்த பொதுநல பரப்புரை நிலையம் The…
மேலும்....
படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்திக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி சபையில் அஞ்சலி
இராணுவத்தினரால் யாழ் செம்மணியில் வைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவியான கிருஷாந்திக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி சபையில் அஞ்சலி செலுத்தியது. பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற பிள்ளைகள் தாய்மாரின் மந்தபோசணை தொடர்பாக யுனிசெப் நிறுவனம் விடுத்திருக்கும் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாவது நாள் விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தனது அஞ்சலியை செலுத்தினார். யாழ்.செம்மணியில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் 26 ஆவது நினைவுதினம் நேற்று புதன்கிழமை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அனுஷ்டிக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தி செம்மணி பகுதியில் வைத்து இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.இந்நிலையிலேயே அவரையும் அவரை தேடிச்சென்ற நிலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் உறவினர்களையும் நினைவு கூர்ந்து சபையில் தனது அஞ்சலியை கஜேந்திரன் எம்.பி. செலுத்தினார்
மேலும்....